வெடித்து சுக்குநூறானது
சிவகாசி பட்டாசு மட்டும் அல்ல
அங்கே இருக்கும்
பல சிறுவர்களின் வாழ்கையும் தான்!!
Tuesday, September 30, 2008
[Tamil Poem] - Untouchability...
அர்ச்சகர்
என்னை தொடாமல் தந்தார் பிரசாதம்
ஆனால்
தொட்டு எடுத்தார் நான் வைத்த காணிக்கையை மட்டும் ....
மனம் கொண்ட மனிதனை மதிக்காமல்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தை மதிக்கும் இவர்களா
கடவுளின் தூதர்கள் ?
என்னை தொடாமல் தந்தார் பிரசாதம்
ஆனால்
தொட்டு எடுத்தார் நான் வைத்த காணிக்கையை மட்டும் ....
மனம் கொண்ட மனிதனை மதிக்காமல்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தை மதிக்கும் இவர்களா
கடவுளின் தூதர்கள் ?
[Tamil Poem] - Caste again ....
விலங்கில் இருந்து மனிதன் - பரிணாம வளர்ச்சி
மனிதனில் இருந்து விலங்கு - ஜாதிகளின் வளர்ச்சி !!
மனிதனில் இருந்து விலங்கு - ஜாதிகளின் வளர்ச்சி !!
[Tamil Poem] - I am carrying something or other ...
சிறு வயதில் புத்தகங்களை சுமந்தேன்
அதன் உடன் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை சுமந்தேன்
பருவ வயதில் பல ஆசைகளை சுமந்தேன்
அதன் உடன் எதையும் எதிர்பாரா நட்பை சுமந்தேன்
வெற்றி பெற்ற பொழுது பாராட்டுகளை சுமந்தேன்
அதன் உடன் பலரின் ஆசிகளை சுமந்தேன்
தோல்வியுற்ற பொழுது வேதனையை சுமந்தேன்
அதன் உடன் வேலையற்றவர்களின் விமர்சனங்களை சுமந்தேன்
அதன் உடன் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை சுமந்தேன்
பருவ வயதில் பல ஆசைகளை சுமந்தேன்
அதன் உடன் எதையும் எதிர்பாரா நட்பை சுமந்தேன்
வெற்றி பெற்ற பொழுது பாராட்டுகளை சுமந்தேன்
அதன் உடன் பலரின் ஆசிகளை சுமந்தேன்
தோல்வியுற்ற பொழுது வேதனையை சுமந்தேன்
அதன் உடன் வேலையற்றவர்களின் விமர்சனங்களை சுமந்தேன்
Monday, September 29, 2008
[Tamil Poem] - கையூட்டு
கையூட்டை
ஒழிக்கவேண்டும்
கையூட்டு வாங்குபவரை
கைது செய்யவேண்டும்
இப்படி முழங்கிய அதிகாரி
கோவிலுக்குச் சென்று வேண்டினார்
முடியைக் காணிக்கையாகத் தருகிறேன் கடவுளே
எனக்கு நீ பதவி உயர்வு தந்தால்!!!
ஒழிக்கவேண்டும்
கையூட்டு வாங்குபவரை
கைது செய்யவேண்டும்
இப்படி முழங்கிய அதிகாரி
கோவிலுக்குச் சென்று வேண்டினார்
முடியைக் காணிக்கையாகத் தருகிறேன் கடவுளே
எனக்கு நீ பதவி உயர்வு தந்தால்!!!
Monday, September 22, 2008
[Tamil Poem] Where are we heading to?
News: Communal riots in Karnataka.
எங்கே போகிறோம் நாம்?
எதை நோக்கி போகிறோம் நாம்?
நமக்கு வரவேண்டிய தண்ணீர் கேட்டோம்
நம்மவர்களை அடித்தார்கள் வெறிபிடித்து!
உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்றோம்
உதைத்தார்கள் அங்கிருக்கும் தமிழர்களை!!
இவ்வளவு காலம் மனிதன் என்பதை மறந்து
கன்னடன், தமிழன் என்று பிரிவினை பேசிய கூட்டம்
இன்று ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என்று அடுத்தகட்ட பிரிவினை நோக்கி செல்கிறது !!
கன்னட நண்பர்களே,
சுயமாக சிந்தியுங்கள்
யாரோ தூண்டி விடுவதை நம்பி
மனித மிருகங்கள் ஆகிவிடாதீர் !!
எங்கே போகிறோம் நாம்?
எதை நோக்கி போகிறோம் நாம்?
நமக்கு வரவேண்டிய தண்ணீர் கேட்டோம்
நம்மவர்களை அடித்தார்கள் வெறிபிடித்து!
உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்றோம்
உதைத்தார்கள் அங்கிருக்கும் தமிழர்களை!!
இவ்வளவு காலம் மனிதன் என்பதை மறந்து
கன்னடன், தமிழன் என்று பிரிவினை பேசிய கூட்டம்
இன்று ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என்று அடுத்தகட்ட பிரிவினை நோக்கி செல்கிறது !!
கன்னட நண்பர்களே,
சுயமாக சிந்தியுங்கள்
யாரோ தூண்டி விடுவதை நம்பி
மனித மிருகங்கள் ஆகிவிடாதீர் !!
Friday, September 19, 2008
[Tamil Poem] Paradox...
ஆண் ஆதிக்கம்
நிறைந்த இவ்வுலகில்
வாழும் பொழுது
ஒர் விதவையைப்
பூச்சூட அனுமதிக்காத
இந்தச் சமூகம்
வீழ்ந்தபின் போட்டது
பல நூறு பூமாலைகளை
Subscribe to:
Posts (Atom)