Friday, August 8, 2008

Rajinikanth - Kamal -- Nadigar Sangam - Media!!!

'பாபா' படம் வெளியாகும்போது படப்பெட்டியை அபகரித்து ஓடினர் சில தடியர்கள். அப்போது இந்த நடிகர் சங்கம் எங்கே இருந்தது?

ஆனால், அந்த சம்பவத்துக்கு காரணமான மனிதர் இன்று சிறையில் --( ரஜினி ஸ்டைல் கருத்து) ... 'போடா, அந்த ஆண்டவனே நம்ம பக்கம்...'

இந்த நடிகர் சங்கத்தலைவன் 'குசேலன்' ரிலீஸ் செய்யமுடியாமல் குண்டர்கள் தடுத்தபோது குரல் கொடுக்கவில்லை. ரஜினி வருத்தம் தெரிவித்ததும் வந்து அறிக்கை கொடுக்கிறான். இவன் எதற்கு 'தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவன்'..??

ஆக, நடிகர் சங்கம் ரஜினிகாந்திற்கு இதுவரை எந்த விதத்திலும் உதவவில்லை... ரஜினிக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவமாட்டார்களாம்... ஆனால், ரஜினி கையைக்கட்டிகொண்டு இருக்கவேண்டுமாம்...

அந்த வன்முறைக் கட்சி ரஜினி ரசிகர்களை குண்டர்கள் வைத்துத் தாக்கியது, அப்போது என்ன செய்தது இந்த நடிகர் சங்கம்...?? ஆனால், ரஜினி வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் தன் ரசிகர்களுக்காக குரல் கொடுத்தார்... அப்போது, ரஜினி 'வாய்ஸ்' எடுபடவில்லை என்று கேலி செய்தது இந்த 'மீடியா'... ஏ, முட்டாள் மீடியாவே, தலைவர் தன் ரசிகனுக்காக குரல் கொடுத்தார்... தான் வெற்றி பெற குரல் கொடுக்கவில்லை...

'குசேலன்' பட செலவை திருப்பி எடுக்க தமிழகமே போதும்... இது போக வெளிநாட்டு விநியோகம்... ஆனால், காசுக்காக ரஜினி வருத்தம் தெரிவித்ததாக புரளி கிளப்புகிறார்கள், இந்த முட்டாள்கள்...

ஆமாம், இவ்வளவு களேபரத்திலும் அமைதியாக இருக்கிறானே ஒரு 'நண்பன்'... அவன் உண்மையில் நண்பன்தானா? இவனைப் போய் படத்துக்கு படம் தூக்கிப்பிடிக்கிறாயே, தலைவா... முதுகில் குத்தும் ஜென்மங்களுக்கு இத்தனை இடம் தேவைதானா..? அவன் படத்துக்கு விளம்பரம் தேடமட்டும்தான் உன்னை நாடுகிறான்...

ரஜினியைப் பார்த்து விசிலடிப்பவர்கள் மட்டுமே ரசிகர்கள் அல்ல... எந்த பிரச்சினையிலும் கூட நிற்க வேண்டும்... நாங்கள் இருக்கிறோம் தலைவா... உன்னை தாங்கிபிடிக்க... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்...

சத்தியம் ஜெயிக்கும்...
-- ஓர் ரசிகனின் ஆதங்கம் source Rajinifans.com discussion forum

1 comment:

Anonymous said...

Nice vadi, We should wait for long time to understand all the reactions of everyone but as ways Rajini goes like a River by overcoming all the problems...

Endrum Anbudan... Rameesh