Thursday, December 25, 2008

[Tamil Poem] - தீவிரவாதம் ...

இந்தியா: பாக் ஒரு தீவிரவாத நாடு என்கிறது
பாக்: இந்தியா ஒரு தீவிரவாத நாடு என்கிறது

கடவுளே!
என்னைப் போன்ற பாமரனுக்குத்
தீவிரவாதத்தின் நிறம்
காவியா? பச்சையா?
தெரியவில்லை

ஆனால், அப்பாவி மக்கள்
சிந்தும் இரத்தத்தின்
நிறம் சிவப்பு
என்பது நன்றாகத் தெரிகின்றது

உங்களுக்கு இன்னுமா அது புரியவில்லை?
காவியா அல்லது பச்சையா என்பதை பிறகு பார்போம்
முதலில் இனி உலக வரைபடத்தில் சிவப்புச் சாயம்
பூசப்படாமல் தடுத்து நிறுத்துங்கள்!!

3 comments:

Anonymous said...

gud one...
keep posting :)
my best wishes
ashok~

Anonymous said...

simple and gud
keep posting :)

Sivakasi Mahesh said...

Kalakkal