Saturday, January 2, 2010

[Tamil Poem] இப்படியல்லவா நாம் வாழ்கிறோம்?

மனிதனாய்ப்பிறந்தோம் -
மதிகெட்டு இருந்தோம்

எழுதிவைத்ததைப்படிப்போம் -
ஏன் படித்தோம் என்பதை மறப்போம்

மதம், சாதி என்று பிரிவோம் -
மனமதில் சாக்கடையை நிரப்புவோம்

பணத்தை உடல் முழுவதும் ஏற்றிவிட்டோம் -
அன்பை என்றோ தொலைத்துவிட்டோம்

தீமைகள் பல செய்துவிட்டோம் -
பிறர்மேல் குற்றம் சுமத்திவிட்டோம்

உடல் தளர்ந்திடுவோம் -
ஆயினும் வீண் பெருமை பேசிடுவோம்!

No comments: