Friday, January 8, 2010

[Tamil Poem] கற்றுக்கொள்

தன் தலையை எரித்து
பிறருக்கு ஒளிதரும்
தீக்குச்சியிடம்
தியாகத்தைப் படி

சில நாட்களே வாழினும்
தன்னுள் தேனைவைத்து
பறவைகளுக்குக் கொடுக்கும்
மலர்களிடம்
சேவையைப் படி

தலைகீழ் தொங்கினும்
சுகமாய் பிறருக்குக் காற்றைத்தரும்
மின்விசிறியிடம்
பணிவைப் படி

எத்தனை முறை அழித்தாலும்
தன் கனவு இல்லத்தை
மற்றொரு முறை பின்னும்
சிலந்தியிடம்
விடாமுயற்சியைப் படி

வெட்ட வெட்ட வளரும்
விரல் நகங்களிடம்
வளர்ச்சியைப் படி

நெருப்புக்குழம்பைத் தன்மீது வாங்கி
விண்ணூர்தி பறக்கச் செய்யும்
விண்தளத்திடம்
தாங்கிக்கொள்வதைப் படி

No comments: