Friday, January 8, 2010

[Tamil Poem] போரில் மடிந்த கிராமத்து வீரனின் மனைவி

ஒத்தையடிப் பாதையிலே
சத்தமின்றி
நீ போகையிலே

ஒட்டுமொத்த நாட்டுமக்கள்
கூடி நின்று
அழுகையிலே

நாம்பெத்த ராசா
ஒன்னுமறியா
முழிக்கையிலே

எனக்கு
ஒட்டுச்சொட்டுக்
தண்ணீவரலே
உனக்கு
முன்பு கொடுத்த
வாக்கினாலே!!

ஆனால்
நாட்டு மக்கள்
கண்ணீராலே
என்
நெத்திக் குங்குமம்
காணலியே!!

*

ரத்தத்தில் திலகமிட்டு
யுத்ததிற்கு அனுப்பினேன்
நான்

உன் குருதியை
தேசப்பெண்களுக்கு
தானங்கொடுத்து
அவர்கள் திலகத்தைக்
காத்திருக்கிறாய்
நீ

2 comments:

Renuga said...

wow..it's really super..

Vadivel said...

Thanks Renuga