Monday, January 4, 2010

[Tamil Poem] தாய்....

செந்தாமரை முகத்தவளே
பைந்தமிழ் அமுதை ஊட்டியவளே

உன் பொறுமையைக் கண்டு
நத்தை தன் வேகத்தைக்
குறைத்திடும்

உன் பண்பை கண்டு
சுனாமியும் பணிவை
உணர்ந்திடக்கூடும்

உன் எளிமையைக் கண்டிருந்தால்
காமராஜர் இன்னும்௯ட சிக்கனமாய்
இருந்திருக்கக்௯டும்

பாரதியே இக்காலத்தில் பிறந்திருந்தால்
மம்மி என்றே அழைத்திருப்பான்
தன் தாயை

என்னை அம்மா என்று
கூற வைத்தவளே
என்னுள் தமிழ்ப்பாலை
கலந்திட்டவளே

நான் செய்த பிழைதான் என்னவோ?
என்னைவிட உனக்கு
எமனைத்தான் பிடிக்குமோ?

3 comments:

Sivakasi Mahesh said...

Touching

லோகசுநதரம்.சிவா said...

The whole poem applies to me also and especially, the last 3 lines. grt da.......

yams said...

Super!