Sunday, January 3, 2010

[Tamil Poem] பொய் முகங்கள்

வலியவரிடம் அப்பாவியாக
இளைத்தவனிடம் வீரனாக
மனைவியிடம் கதாநாயகனாக

பிரச்சனன என்றதும் ஒரு சந்தர்ப்பவாதியாக
தயவைத்தேடி வருபவர்களிடம் (சர்வ) அதிகாரியாக
பெண்களிடம் நகைச்சுவையாளனாக

நமக்குப் பிடிக்காதவர்களைப் புறம்பேசுபவனாக
ஒருத்தரின் மறைவுக்குப் பின் பலமாக புகழ்பவனாக
நமக்குத்தான் எத்தனை பொய் முகங்கள்!!

1 comment:

Maruthi said...

Nice one vadivel, I guess we all take one or the other role sadly :-(