Saturday, April 17, 2010

[Tamil Poem] உலகமயம்...

நீ வந்த பின்னே
உலகமே ஒர்
கிராமமாய்ச்சுருங்கியது

அமெரிக்கா அண்டைமாநிலமானது
ஐரோப்பா பக்கத்து வீடானது
மிக்க மகிழ்சியே!
ஆனால்
எங்கள் நாட்டில் உன்னால்
பல கிராமங்கள் அழிந்தே
போயினவே தெரியுமா?

*

உழவனுக்காக பண்டிகை
அரசு விடுமுறை
பொங்கலைக் கொண்டாட
உழவன் தான் இங்கில்லை!

*

கணிப்பொறி கற்றவன் கரையேறினான்
களிமண்ணில் உழைத்தவன் புரைதள்ளினான்!

ஆங்கிலம் பேசுபவன் தழைக்கிறான்
தாய்மொழி பேசுபவன் விழிக்கின்றான்!!!

மின்வலை தெரிந்தவன் உயருகின்றான்
மீன்வலை அறிந்தவன் சாகின்றான்!!

வாழ்க உலகமயம்!

3 comments:

Rajalakshmi Maran said...

Nice one Vadivel.

yams said...

Nalla iruku anna :)

Anonymous said...

Excellent.Keep writing
Narendran S