Wednesday, April 14, 2010

[Tamil Poem] கண்ணகிக்கு கற்சிலை தேவையா?

கள்வன் என உன்
கணவனைக் கொன்றிட
நெருப்பைக் கக்கியவளே!
மதுரையை எரித்தவளே!
கற்புக்கரசியே கண்ணகியே!

கோவலன் தலைக்கு
இவ்வளவு விலையா?

அரசன் செய்திட்டது
நீதியென்றுரைக்கவில்லை
ஆனால் தாயே
நீயென்ன நீதி செய்தாய்
சொல்வாயோ?

பாண்டியன் செய்தபிழைக்கு
பாமரனை வதைத்ததுதான்
நியாயமோ?

மதுரையை எரித்திட்டதற்க்கு
புண்ணியம் செய்ததைப்போல்
இப்புவி காண கற்சிலைதான்
தேவையோ?

கோவலனுக்காய் நீ எரித்த மதுரையில்
எத்தனைக் கோவலன்கள் மாண்டனரோ!
மாண்டவர்களின் மனைவியரும்
மண்ணெரிக்க புறப்பட்டால்
இப்புவிதனில் மானிடமின்றி
கற்சிலைகளே மிஞ்சும்!

1 comment:

Anonymous said...

http://www.hindu.com/2006/06/16/stories/2006061603461100.htm