Thursday, January 14, 2010

[Tamil Poem] தியாகி ...

உடலை வருத்தி
உணவைச் சுருக்கி
உன்னை உருக்கி
சுதந்திரத்தீ உருவாக்கி
வீரம் பெருக்கி
நீ வாங்கிய விடுதலை தான் எங்கே?

*
காதலர்கள் காலாற
நடைப்பயில முடியவில்லை!

முசல்மான்கள் நிம்மதியாய்
வாழ முடியவில்லை!

கடவுள்சிலைகளே காக்கிகள்
துணையின்றி
நடமாட முடியவில்லை!

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

உனக்குத்தெரியுமா?
உன் சந்ததியரே
வெள்ளையனிடம்
விரும்பிச்சென்று
(அடிமைகளாய்)
வேலை செய்யும் காலமிது!!

*

இந்திய மக்கட்தொகையில்
பாதி வறுமைக்கோட்டிற்கீழ்
மீதி அறிவுக்கோட்டிற்கீழ்!!!

படிக்கும் குழந்தைகளையோ
பட்டைத் தீட்டுகின்றனர்
அயல்நாட்டில்
(பிற்காலத்தில்)
அறிவை அடமானம்வைக்க!

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

இந்திய வரைப்படத்தைச்
சுருக்க தீவிரம்காட்டுகிறது
அண்டை நாடுகள்

இந்திய நதிகளிலிருந்து
தண்ணீர் கொடுக்காமல்
மனித மனங்களை
சுருக்கியே வைத்திருக்கிறது
அண்டை மாநிலக்கட்சிகள்

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

மதங்களின் பெயரால் கொலைகள்
வறுமையின் பெயரால் கொலைகள்
காமத்தின் பெயரால் கொலைகள்
அரசியல் காழ்புணர்ச்சியில் கொலைகள்
மனிதவுயிர்கள் மலிவாய் போன காலமிது

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

நதிகளை இணைக்க
மனங்களைத் திறக்க
மதத்தலங்களைக் காக்க
மற்றுமொறு விடுதலைப்போர்
தேவைப்படுகிறது தியாகியே!

சுதந்திரத்திற்குப் பின் உன்னை மறந்தோம்
உன் விலாசம் தொலைத்தோம்
இன்று தேவையிருக்கிறது
தேடுகிறோம்
தேடுகிறோம்
வேலைப் பளுவால்
வீட்டிலிருந்தபடியே இணையத்தளத்தில்!!!

4 comments:

Sivakasi Mahesh said...

அற்புதமான கவிதை

லோகசுநதரம்.சிவா said...

Wonderful da vadi. no words to comment apart from this. Never xpected that such a tamil poet is sleeping inside u. grt. keep the good work.

Unknown said...

anna simply superb. grt work.

Anonymous said...

Urangum Puliyai usuppi vittathu yaru.Avarukku en Mudla Vannakkam
Narendran s