Sunday, January 24, 2010

[Tamil Poem] இலங்கைத்தமிழன்

இலங்கையருகில்
கடல் தண்ணீரின்
நிறம்
கடந்த நாற்பது
ஆண்டுகளாக
சிவப்பு நிறமாம்!

இலங்கையினுள்
தமிழனை
எரித்து எரித்து
தின்று தின்று
வெறுத்துப் போன
நெருப்பு
விருப்பவோய்விற்கு
எழுதிப்போட்டுள்ளதாம்!

இலங்கையில்
தமிழனின் வீட்டில்
அடுப்பு ஏற்றப்படுகிறதோ
இல்லையோ
வீட்டின் கூரைகள்
மறக்காமல்
கொளுத்தப்படுகின்றனவாம்!

*

"ஈழத்தோழன் கதறுகிறான்"

தாய்நாட்டில் சொந்தங்கள்
சமாதியாய்
வெளிநாட்டில் பந்தங்கள்
அகதியாய்

இங்கே
ஆயுதங்கள் அழிக்கப்பட்டு
மானிடம் வாழுமா?
அல்லது
மானிடம் அழிக்கப்பட்டு
ஆயுதங்கள் சிதறிக்கிடக்குமா?

அரசே
முதலில் குண்டெறிந்தது
தமிழனா? சிங்களத்தவனா?

முதலில் கொலையுண்டது
தமிழனா? சிங்களத்தவனா?

தெரியவில்லை எனக்கு
ஆனால்

நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்

இங்கே
மனித மனங்கள் சுருங்கியதால்
மயானங்கள் பெருகியது

மனங்களை விரிப்போம்
ஜனங்களை காப்போம்!

No comments: